ஜூன் 19 தாழ்வாரம் நிகழ்வு. 3 நூல்கள் & மூன்று உரைகள்... சந்திக்கலாம்
தாழ்வாரம் நவீன இலக்கியக் களம் கும்பகோணம் களம் - 12 ♥ தாழ்வாரம் ஓராண்டு நிறைவு நிகழ்வான பன்னிரண்டாவது நிகழ்வு 27/1/2019 அன்று நடைபெற்றது சற்று தாமதமாக தொடங்கிய நிகழ்வு தொடக்கத்திலேயே களை கட்ட ஆரம்பித்தது. கவிஞர் செருகுடி செந்தில் படைப்பாளர்களையும் விமர்சகர்களையும் வரவேற்றுப் பேசி களம் 12ஐ முடுக்கிவிட்டார். அவர் மேலும் பேசுகையில், தொடங்கியதுமுதல் இந்த பன்னிரண்டு மாதங்களில் தாழ்வாரத்தின் பயண அனுபவங்களையும் அதில் வைக்கப்பட்ட நூல்கள் குறித்தும் அவற்றின் படைப்பாளர்கள் குறித்தும் தாழ்வாரத்தில் அறிமுகம் வைக்கப்பட்ட நூல்கள் விருதுகள் வென்றிருப்பதையும் பெருமைபட கூறி படைப்பாளர்களை வரவேற்று அமர்ந்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வை கோ. பாரதிமோகன் தொகுத்து வழங்க... முதலாவது நூலாய் எழுத்தாளர் பா. சரவணகுமரனின் 'கள்ளிவட்டம்' சிறுகதை எடுத்துக்கொள்ளப்பட்டது. எம். எஸ். பாலு அவர்கள் நூல் குறித்து பேசினார். அவர் பேசுகையில் தனது பால்யத்தை நினைவு கூர்ந்து தனது வாழ்வானுபவத்தை கதைகளோடு முன்வைத்து பேசினார். இத்தகைய பண்பே சரவணகுமரனின் படைப்பு வெற்றிபெற்றதற்கான அடையாளமாய் தாழ்வாரக் கூ...
Comments
Post a Comment